ஏவல் செய்வினை இறக்குதல்

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது  ஏவல் பில்லி சூனியத்தால்பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.
                                                  

           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில்  சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.

           அந்த ஏவல் பாவையை  ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லிசூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து ஏவல் பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.

           அந்த   ஏவல் பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் ஏவலுக்கு படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.

         மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த  ஏவல் பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

Comments