அம்புலி என்ற இரத்த காட்டேரி

ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய்நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை -இரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

               இப்போது இரத்தகாட்டேறி என சொல்லப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர் "அம்புலி". இந்த அம்புலி தான் மருவி இரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.


                      சரி இந்த அம்புலியை (இரத்தகாட்டேறியை) வசியப்படுத்தி செய்வினை செய்யும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை , சிறிது குங்கும், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள். இவை அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து  மந்திரத்தினை 324 முறை உருவேற்ற வேண்டும்.

            இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324 முறை ஓத வேண்டும்.  இவற்றை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குங்குகுமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும்கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில்விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினைபூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.

                    அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், பெண்ணின் உருவில், கிழவன் உருவில்,கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.

             இப்போது இந்த இரத்தகாட்டேறியின் (அம்புலி) எவுவதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறியலாம். மேலே குறிப்பிட்ட அந்த செய்வினை மந்திரத்தை 324 முறை உச்சாடனம் செய்யும் போது வளிமண்டலத்தில் உள்ள காற்றலையில்  எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது. இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் . இந்த எதிர் அலைகள் காற்றில் கலக்கும் போதுஎலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில்அடிப்படையிலேயே இருக்கின்ற  இரசாயணமும், குங்குமத்தில் இருக்கின்ற இரசாயணமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நெருப்பில் போடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம்  எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை காற்றலைகள்.

                 இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற  செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்குகோழியின் இரத்தத்தில் இருக்கின்ற  ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான  எதிரலைகள் அந்த பூசணிக்காயின் செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ட்ரான்ஸ்பார்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.


                   இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமே? அதுக்கு தான் விபூதி இருக்கிறதே! விபூதியில் இருகின்ற வேதிப் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை அந்த குடும்பத்தின் மீது தெளிக்க அந்த எதிர்மறை அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது. இப்போது வலுவான எதிர்மறை அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும்இரத்தகாட்டேறியின் ஆட்டம் ஆரம்பமாகின்றது. இரத்தகாட்டேரி ஏவப்பட்ட குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண் போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் பயம் இருக்கும். அது பேய், பிசாசு, பூதம், நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் மோகினி, கிழவிஎதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த எதிமறை அலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த எதிர்மறை அலைகளின் பிரதான வேலை. இந்த எதிர்மறை அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்வுகளை வலுவிழக்க செய்யும், இதன் விளைவாக வாயிலும், மூக்கிலும் ரத்தம் வெளியேறி (இரத்தகாட்டேரி தாக்கி) மரணம் உண்டாகும். இப்போது புரிகிறதா செய்வினை - இரத்தகாட்டேரி ஒருவரை தாக்குவது எப்படி? என்று, இப்போது அடிமனதில் ஒரு கேள்வி? பகலில் அடங்கி இருக்கும்இரத்தகாட்டேரி இரவில் மட்டும் தாக்குவது எப்படி?

                   இரவு என்றால் இயல்பாகவே அனைவருக்கும் பயம் இருக்கும். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த எதிர்மறை அலைகள் சேரும் போது தான் செய்வினை -இரத்தகாட்டேரியின் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த எதிர்மறை அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்புலியை" -இரத்தகாட்டேரியை  இரவில் பயங்கரமாக அலைகின்ற இரத்தகாட்டேரியாக உருவாக்கினான். இது தான் இரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. செய்வினை செய்யும் மந்த்ரீகர்களே அறியாத சூட்சுமம் இதுவாகும்.

Comments

Post a Comment