சுக்ர தோஷ பரிகார மூலிகைவேர் ,யந்திரங்கள் .
ஒருவரது வாழ்க்கையில் சுக போகங்களுக்கும் சுபிட்சங்களுக்கும் மணவாழ்க்கைக்கும் நல்ல வேலை கிடைக்கவும் நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்கள் எண்ணம் போல் நடக்கவும் மூலக்காரணமாக இருப்பது களத்திரகாரகன் சுக்ர பகவான் .ஜாதகத்தில் ஆதிபத்யம் நன்றாக இருந்தால் நன்மைகள் கூடும் ஆதிக்கம் குறையுமானால் தீமைகள் நடக்கும் தடைகள் அதிகம் இருக்கும் .
அத்தி மர வேர்
சுக்கிரனுக்கு உகந்த அத்திமர வேரினை சுக்கிரவாரம் நல்ல நேரம் பார்த்து வெட்டி எடுத்து வந்து அதில் சுக்கிரனுக்குரிய மூலமந்திரத்தை உருவேற்றி அதில் பஞ்ச வர்ண நூல் சுற்றி அதை தாயத்தாக அணிந்து கொண்டால் தடைகள் அனைத்தும் விலகும் .
சுக்கிர பரிகார யந்திரம்
சுக்கிரனுக்குரிய யந்திரங்கள் பல வகை யந்திரங்கள் உண்டு அதில் எண் யந்திரங்கள், மகாலட்சுமி யந்திரம் ,சுக்கிர பரிகார யந்திரங்கள் இவைகளை அணிந்தாலும் தடைகள் விலகும் இதை தாயத்தாகவோ அல்லது பாக்கட்டில் வைக்கும் படியாக தயார் செய்து பாக்கட்டில் வைத்தும் பலன் பெறலாம் .
இதை அணிந்தால் தடைபட்டோ தாமதப்பட்டோ வருகிற திருமண காலம் நெருங்கி வரும் ,மனைவியை பிரிந்து வாழும் கணவன் ,கணவனை பிரிந்து வாழும் மனைவி கூட இந்த சுக்கிர பிரீத்தி அடைந்து பலன் பெறலாம் .
Comments
Post a Comment