மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை அருகில் சென்று மூலிகை இருக்கும் இடத்தை   சுத்தம்   செய்து     கொள்ள வேண்டும். பின்பு தேங்காய், வாழைப்பழம், சூடம், பத்தி, சாம்பிராணி, வெற்றிலை பாக்கு, அவல், பொறி, கடலை, இளநீர், கல்கண்டு, விபூதி, சந்தனம், குங்குமம், பொங்கல், இவைகளை தல வாழையிலையில் வைத்து ஆரம்பிக்க வேண்டும். முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு வெள்ளை நிறமுள்ள நூலில் மஞ்சள் தடவி பின்பு ஒரு விரல் மஞ்சள் கோர்த்து தாலி கட்டுவது போல் மூலிகையின் மீது கட்டவும். பின்பு தேங்காயுடைத்து குரு மந்திரம் 33  தடவை கூறவும் பின்பு விநாயகர் மந்திரம் 108 முறை கூறவும். பின்பு நம் குல தெய்வத்தையும், நம் முன்னோர்களையும் வணங்கி மூலிகை சாப நிவர்த்தி மந்திரத்தை 1008 முறை கூறி முப்பலி கொடுத்து இரும்பாலாகிய ஆயுதம் படாமல் ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுக்கவும்.

சாப நிவர்த்தி மந்திரம்

“ஓம் சர்வ மூலிகையே உன் சாபம் சாபம் நசி மசி, பரமசிவன் சாபம் நசி மசி. பார்வதி சாபம் நசி மசி, அகஸ்தியர் சாபம் நசி மசி, சப்தரிஷி சாபம் நசி மசி, கோடான கோடி ஜீவ ராசிகளின் சாபம் நசி மசி, ஏனையோர் சாபம் நசி மசி, சகலமும் எனக்கு வசி வசி வசியமாக சுவாஹா”  

“ஓம் மூலி சர்வ மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா”

சாப நிவர்த்தி சில சூட்சுமங்கள்

1.தன்னுடைய பட்சி அரசிலும், சுப ஓரையிலும் எடுக்க வேண்டும்.
2.ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, சந்திர சூரிய கிரஹணம், இப்படிப்பட்ட நாட்களில் எடுக்க வேண்டும்.
3.இல்லையெனில் தாரா பலன் நட்சத்திரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும். இது 100% மிகச்சிறந்த பலனைத்தரும்.
4.நிர்வாணமாக இருந்து எடுக்க வேண்டும்.
5.சுண்டு, விரல் நகம் படக்கூடாது.
6.படையல் சரியாக வைக்கவும்.
7.விரல் மஞ்சள் வைத்து தான் காப்பு கட்ட வேண்டும்.
8.பிரம்ம முகூர்தத்தில் தான் எடுக்க வேண்டும்.
9.அரைஞாண் கயிறு இருக்கக்கூடாது.
10.முப்பலி கொடுத்துதான் எடுக்க வேண்டும்.(தேங்காய், வெண்பூசணி, எழுமிச்சம்பழம் இவைகளில் குங்குமம் தடவி மூலிகையின் மீது படும்படி செய்யவும்).

Comments