அச்சிட்ட யந்திரங்கள் அதிஷ்டத்தை கெடுக்கும் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது


பல தரப்பட்ட மக்கள் கடைகளில் அநேகமான விளம்பரங்களை பார்த்து அச்சிட்ட யந்திரங்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர் .ஆனால் அந்த யந்திரத்தால் எந்த பயனும் கிடையாது .

இந்த உண்மை அக்காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றது ஆனால் இதை கடைபிடிப்பவர்கள் யாரும் இலர் ..அதாவது மாந்திரீகம் ஜோதிடம் என்பது புத்தகத்தை படித்தே பல விசயங்களை சாதிக்க முடியும் என்று பலர் கனவுக்கோட்டை கட்டை விட்டு அந்த மண் கோட்டைக்கு பல லட்சம் தொகையை செலவிட்டு பின்னர் கூறுவார்கள் .மந்திரம் எல்லாம் பொய் பித்தலாட்டம் என்று ஆனால் அவர்கள் சரியான குருவிடம் சென்று பயிலாத காரணத்தினால் இந்த வார்த்தையை கூறினார் .

நானும் என் தாத்தா முத்து பாண்டி வைத்தியர் அறிவுரையின் படி எங்கெங்கெல்லாம் பயிற்சி வகுப்பு நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று படி அப்போதுதான் உண்மை எது போய் எது வென்று தெரியும் நானும் அவருடைய வாக்கை கேட்டு தமிழ்நாடு முழுவதும் பல பயிற்சி வகுப்புகள் ௨௦௦௦ வது ஆண்டிலிருந்து பயின்று வருகிறேன் எல்லாம் வெளிவேஷம் பொய் பித்தலாட்டம் நான் அவர்களிடமே சண்டை போட்டிருக்கிறேன் ஆனால் அவர்களால் என்னை எதுவும் செய்ய முடிய வில்லை ஏன் .அவர்களால் வாய் பேச்சுகளால் மக்களை மயக்கி பணம் சம்பாதிகின்றனர் .

நான் வேறுமாநிலத்திற்கு சென்றேன் ஆந்திரா ,ராஜஸ்தான் ,ரிஷிகேஷம் ஹரித்வார் ,போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று அனுபவப்பட்ட பிறகுதான் .என் தாத்தாவின் அருமையை புரிந்து கொண்டேன் .முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் அடிக்கடி கூறுவது நாய் குரைத்தாலோ  எறும்பு கடித்த்காலோ நீ கோபம் கொள்வாயா ,இல்லை அல்லவா 

இதே விசயம்தான் நான் கூறுகிறேன் நீ மனிதன் என்று நினைப்பவர்கள் எவருமே மனிதர்கள் அல்ல எல்லோரும் மிருக குணங்களை பெற்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆதலால் ,எந்த ஒரு மனிதனையும் நீ தேடி செல்ல வேண்டாம் எல்லா மனிதர்களும் உன்னை தேடி வருவார்கள் அவன் உண்மையான மனிதன் என்றால் .

ஆக இந்த மாந்திரிகக்கலை  மருத்துவம் , ஜோதிடம் இந்த மூன்று வித்தைகளும் ஒரு மனிதனுக்கு கூடவேனுமென்றால் அவன் முந்தைய ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் விளைவு .அதனால் அவனை மதித்து நட வேறு யாவரையும் மதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை வைராக்கியத்தோடு வாழ் என்று கூறினார் . 

Comments