அள்ள அள்ள குறையாத செல்வத்திற்கு பூஜை


ஆடி மாதம் பவுர்ணமி அல்லது ஆடி மாதம் வளர்பிறை ஞாயிறு அன்று ஆவாரை செடிக்கு தூப தீபம் காட்டி நிவேதனம் செய்து செடியிடம் வேண்டி கொண்டு அதன் வேர் அறுந்து விடாமல் செடியை எடுத்து ஆயுதம் உபயோகிக்காமல் வேரை மட்டும் எடுத்து மஞ்சள் பூசி, மஞ்சள் துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்து அடிக்கடி தூப தீபங்கள் காட்டி வர லக்ஷ்மி கடாட்சம் ஏற்பட்டு மிகுந்த செல்வம் சேரும்.

அதே போன்று வெள்ளிக்கிழமை 6-7 மணிக்குள் கரு ஊமத்தை செடிக்கு பூஜைகள் செய்து வேரை மேற்சொன்ன முறைப்படி எடுத்து மஞ்சள் தடவி தூப தீபம் காட்டி தாயத்தில் அடைத்து வலது புஜத்தில் கட்டி கொள்ள பணம் பல வழிகளில் வரும். இது போன்று நம் முன்னோர்கள் கொடுத்து சென்ற முறைகள் பல உள்ளது.


Comments