வசிய வித்தை மர்மங்கள் 3



உடம்பு என்பது பஞ்ச பூதக்கலவை. அந்த கலவை வெளியில், அதாவது ஆகாயத்திலும் தொடர்பினை உடையது. நம் வீடு தொலை பேசியைக் கொண்டு உலகில் யாரோடும் ஆகாய மார்கமாக பேச முடிவது போல இந்த உடம்பும் ஆகாய மார்கமாக பிரபஞ்ச வெளியில் பலவித தொடர்புகளை கொண்டிருக்கிறது.

வசிய மை, மந்திரித்த விபூதி முதலானவை அந்த தொடர்புகளில் ஒருவித கூடுதலான கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. அதன் காரணமாக வசியத்துக்குரியவர் தூண்டப்பட்டு செயல் படுவார். அவரது மன நிலையை, புறத்தில் உள்ள அலை வரிசைகளால் வெளியே இருந்து நிர்வகிக்கலாம்.

வசியம் இயற்கை வசியம், செயற்கை வசியம் என்று இரு பிரிவுபடும். ஒருவரின் ஈர்க்கும் சக்தி எதுவோ, அதைக் கண்டு கல்வி மற்றும் சிந்தனைச் சிறப்பால் பலப்படுத்துவது மற்றொன்றாகும்.

செயற்கையான வசிய முறைகள் பற்றி மந்திர தந்திர நூல்களில் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. இந்த புத்தகங்களைப் படித்து இதிலுள்ள படி செயல்படப் பார்த்து தங்களை இழந்துவிட்டவர்கள் அநேகம்.

ஒருவரது புத்தகம் படித்து மந்திர தந்திரம் கற்றார்களா என்றால் இல்லை என்பதே பதிலாகும். மந்திர தந்திரம் கற்க நமது ஜாதகத்தில் அனுமதி இருக்க வேண்டும்.

மந்திர தந்திரங்களைக் கற்பது பெரிதல்ல. அதை கற்பது மிக ஸ்ரமமானது. நல்ல காரியங்களுக்கு மட்டுமே அதை பயன்படுத்துவது அதைவிட ஸ்ரமமானது.

சாதக விதிப்பாடு காரணமாக இவைகளை கற்றுக் கொண்டு விட்டவர்கள் சில காலத்திற்கே நேர்மையாக இருக்க முடியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாறிவிடும் நிலைதான் இன்று உள்ளது.

மந்திர தந்திரங்களை அறிந்து செயல்படுத்துவதும் சாதாரண விஷயமில்லை. அது புலி வேட்டைக்கு ஒப்பான ஒன்று.

அந்த நாளில் தாங்கள் பேச்சைக் கேட்டு தாங்கள் காலடியிலேயே பலரும் கிடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலர் ஜாலத்திரட்டு வித்தைகளில் ஈடுபட்டார்கள். இதற்காக அவர்கள் ஊமத்தை, பொன்னாங்கண்ணி, செவ்வரளி, கஞ்சா, செங்குவளை, பொன்னாவரை, புனுகு, பாதரசம், கோரோசனை, புல்லாமணக்கு, செந்நாயுருவி போன்ற தாவர உலோக வகயாரக்களை திரட்டி எடுத்து வந்து இவைகளை தனித்தனியே பிழிந்து சாறு எடுத்து பின் ஒன்றாக சேர்த்து ஒரு கல்வத்தில் இட்டு (மூலிகைப்பானை) மத்து கொண்டு மை போல் அரைத்து வழித்து பின் அதை பகவதி உபாசன பூசையில் வைத்து, பத்தாயிரத்து எட்டு முறை பகவதி பிராண மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து, அப்படி ஜெபித்த கையோடு அந்த மையைத் தீண்டும் பொழுது அதில் தீண்டுபவரின் உடல் மின்சார ஜெப சக்தியும் சேர்ந்திட, அந்த மையானது வேலை காட்டத் தொடங்கும்.

இந்த மையை வைத்துருப்பவர்கள் எவரைச் சந்தித்தாலும் அவர்கள் இவர்களிடம் வசியமாவார்கள். இந்த மை உள்ளவர்களைத் தேடி பல மாதர்களும் தானாக வந்து சேருவார்கள். இவர்கள் சொன்னால் அவர்கள் மாடி உச்சியிலிருந்து கீழ் விழுந்து தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.

மைக்கு அவ்வளவு சக்தியா என்று எண்ணத்தோன்றும். அது பலவிதமான பஞ்ச பூதக் கலவையால் உருவான ஒன்று. மையாக மாறிய நிலையிலும் அதன் கதிர்வீச்சு செயல்பட்டபடி இருக்கும். அது எந்த மனிதர் மேல் எல்லாம் படுகிறதோ அவர்கள் அந்த கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு பொதுவில் எதிரிலுள்ள நபர் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை மறந்து போவார்கள். மாறாக ஒருவித சாம உணர்வை உருவாக்கிக் கொண்டு நேசிப்பார்கள்.

ஆனாலும், இன்று இந்த முறைகள் ஒழிந்து விட்டன. காரணம் பல வசிய மூலிகைகளை நாம் இழந்துவிட்டோம். காடுகள் அழிக்கப்பட்டதில் அவைகளும் சேர்ந்து அழிந்துவிட்டன.

எனவே, மந்திர தந்திர முறைகளால் இனி வரும் காலங்களில் வசிய சக்திகளை அடைவது சற்று அசாத்தியமே.

வசியம் என்பதற்கு இன்னொரு பொருள் மயக்குவது. மயக்கம் என்றாலே தன்னிலை இழப்பது என்பதுதான்.

தன்னிலை இழப்பது என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதுதான் பக்தி. எவன் ஒருவன் பக்தியால் இறைவனிடம் தன்னை இழக்கிறானோ, அவனே பேரருளுக்கு உற்றவன் ஆகிறான். ஆனால், இறைவனிடம் மயங்கி தன்னை இழப்பதற்கும், பௌதீக அழகுகளிலும், சாமர்த்தியங்களிலும் மயங்கி, தன்னை இழப்பதற்கும் மிக வித்யாசம் உள்ளது. இறைவனிடம் நாம் நம்மை இழந்தால் முக்தி கிட்டும்.

பௌதீக மயக்கங்களிடம் நாம் நம்மை இழந்தால் அதே முக்தி தூரப்போய்விடும். உலக வாழ்வில் பற்றுதல் ஏற்பட்டு அதனாலேயே ஆசை அதிகரித்து தவறுகள் செய்து, பின் அந்த வினைகளில் சிக்கிக் கொண்டு மீள முடியாதபடி அல்லாடத் தொடங்கி விடுவோம்.

இதனாலேயே வசிய சித்தி பெற்றவர்கள் அதை பௌதீக விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் இறைவனை வசப்படுத்த அதை ஒரு சாதனமாகக் கொண்டார்கள்.

சில வசிய மந்திரங்கள் பற்பல தேவதைகளை நமக்கு அடிமையாக்கும். அந்த தேவதைகளிடமிருந்து நம் வினைத் துன்பங்களில் இருந்து விடுதலை கேட்க வேண்டும். மாறாக அவைகளிடம் இகபர சுகங்களை யாசிக்ககூடாது.

வினைத் துன்பங்கள் நீங்கிய நிலையில் வசீகரிப்பும் அதிகரித்து அதன் காரணமாக இறைவனை எண்ணிச் செய்யும் தவமானது, வெகு வேகமாக ஈடேறும். பல நூறு ஆண்டுகள் தவம் செய்து அடைய வேண்டிய பலனை, வசீகரிப்பு மிகுந்தவர்கள் சில ஆண்டிலேயே அடைந்திடலாம். அஷ்டமா சித்துவில் வசிய சித்துவின் உண்மையான பணி இதுவே. அதற்கு மாறாக இதை பயன்படுத்துகிறவர்கள் உலக வாழ்வில் உழன்று கொண்டே இருப்பார்கள். குட்டிக் குட்டி தேவதைகளிடம் சிக்கிக் கொண்டு விடுவார்கள். முதலில் அவர்களுக்கு கட்டுப்படும் அந்தத் தேவதைகள் பின்னர் அவர்களை விழுங்கிவிடும்.


Comments