வசிய வித்தை மர்மங்கள் 2



வசியத்தை மாயாவித்தையாக கருதுபவர்கள் தான் அதிகம். அதற்கு காரணமும் இருக்கிறது. சில உபாசகர்களும், மாந்த்ரீகர்களும், விபூதி, மை முதலியவற்றால் எதிரியை வசியப்படுத்தும் வித்தை தெரிந்தவர்களாகவும், வேண்டாதவர்களை அடக்குவதற்காக அந்த வித்தையை பயன்படுத்துகின்ற்வர்களாகவும் இருக்கின்றனர்.

பொதுவில் வசியம் என்பதே மனமும் அதன் உணர்வுகளும் சார்ந்த ஒன்று. இது பஞ்ச பூதத்தில் ஆகாய அம்சமாகும். மனித உடலில் ஆகாய அம்சமாகும். மனித உடலில் ஆகாய அம்சமாக உள்ளதை குரங்கு போல ஆடி வைக்க கற்றுக்கொண்டுவிட்டால் வசியக்கலை வசப்பட்டு விட்டது என்று பொருள்.

ஆசை மிக உள்ள மனிதர்களை சுலபமாக வசியப்படுத்தி விடலாம். ஆசை என்பது ஒருவித உலகப்பற்று. இதனால் புலன்களுக்கு இன்பம் ஏற்படுகிறது. உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணை விரும்புகிறான் என்றால் அவள் உடம்பை விரும்புகிறான் என்றே பொருள். அவளும் அவனுக்குப் பிடித்த அழகில் நின்று அவன் மனதை பாடாய் படுத்துகிறாள்.

அதாவது கண்கள் ஒரு அழகைக்கண்டு கருத்தில் மயங்கி அதன் காரணாமாய் பித்தாய் மாறிவிடுவதே ஆசை. இப்படி ஆசை உடையவர்களின் உள்ளம், உடம்பு இரண்டும் பலவீனமான நிலையில் இருக்கும். இதை இப்படியும் கூறலாம், உள்ளம் உடல் இரண்டுமே பஞ்ச பூதக் கலவைதானே? அந்த கலவை வலுவில்லாதபடி இருக்கும்.

யாரெல்லாம் பேராசை உடையவர்களோ அவர்கள் மிக பலவீனமானவர்கள் என்பதே உண்மை. அதனால் தான் சித்தர்களும் ஆசையைஅறுக்க சொன்னார்கள். நம் பலவீனத்தை விலக்கி நம்மை கடை தேற வைக்க அவர்கள் செய்த முயற்சி.

இப்படி பலவீனமானவர்கள் காலில்லாதவன் விழுந்து விடாதபடி நிற்க எதையாவது பற்றிக் கொள்ள துடிக்கிற மாதிரி தாங்கள் ஆசைப்படும் விஷயத்தை அடைய மனதளவில் அதையே பற்றிக் கொண்டு துடிப்பார்கள். இந்த நிலையில் உடம்பிலும் ரசாயன ரீதியாய் பல மாற்றங்கள் நிகழும். உடம்பில் பலவிதமான சுரப்பிகள் உள்ளன. அவை உணர்வுகளின் தன்மை அழுத்தத்திற்கு ஏற்ப சுரக்கக் கூடியவை.

அவை சுரக்கத் தவறினால் பெரிய அளவில் மனதில் எண்ண அலைகள் ஏற்படாது. சில மன நோயாளிகளை குணப்படுத்த உடம்பை கட்டிப் போடுவது ஒரு வகை. ஷாக் ட்ரீட்மென்ட் கொடுப்பது, ஊசி போட்டு துவண்ட நிலையில் கிடத்துவது போன்றவை கண்டிருக்கலாம். இதிலிருந்து உடம்பும் மனமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பது புலனாகும்.


Comments