சகல பிரச்சனைகளுக்கும் மந்திர பிரயோகம் :1

 கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:
 எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு ஓம் சிவசிவ ஓம்மனதார ஜெபித்து வெண் பூசணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்
 நவக்கிரக தோஷம் விலக:
 வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து ஓம் அரி ஓம் என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து விட உடனே நவக்கிரக தோஷம் விலகும்.
 செவ்வாய் தோஷம் விலக :
 செவ்வாய்தோஷம் பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை பூவை வைத்து மல்லிகை பூவை கொண்டு 1008 உரு ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும்.        
 செய்வினை, ஏவல் பாதிப்பு விலக:
 தினசரி விநாயகர் அகவல் படித்து, பிரண்டை துவையல் சாப்பிட்டு வரவும்
தேனில் ஓம் அரி ஒம்”; மந்திரத்தை ஜெபித்து, தேனை சாப்பிட்டு வர செய்வினை, ஏவல் பாதிப்புகள் விலகும்.                                                                                                                               

Comments