ஆண் பெண் பாவை செய்து பிரச்சனைகளை தீர்க்கும் விதம்


பாவையின் வகைகள் :

மெழுகு பொம்மை பாவை 
மாவினால் பாவை செய்தல் 
சுடுகாட்டு சாம்பலினால்  பாவை செய்தல் 
மஞ்சள் கிழங்கினால் பாவை செய்தல் 
களிமண்ணால் பாவை செய்தல் 
மரத்தினால் பாவை செய்தல்

இப்படியாக பாவை இந்த முறைகளில் செய்யப்படுகிறது .இத்தனை வகை பாவை எதற்காக பயன்படுத்தலாம் என்றால் அஷ்ட கர்மங்கள் ஆடவும் ,எதிரிகளின் கரு ஒன்றும் நம் கையில் இல்லாத சூழலில் இந்த பாவை செய்து அதில் அதற்குரிய மந்திர உருக்களை ஏற்றி அவர்கள் வீட்டின் முன் புதைத்தால் அந்த பாவையை தாண்டிய உடன் அவனுக்கு நன்மையோ தீமையோ நடக்கும் .

இந்த முறையினால் பிரச்சனையில் அகப்பட்டவர்கள் நம்மிடம் நேராக வர வேண்டிய கட்டாயம் இல்லை அவர்களுடைய கரு மட்டும் இருந்தால் போதும் அவர்கல்க்குரிய ஏவல் பில்லி சூன்யம் பேய் பிசாசு பிரம்மராட்சசி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளையும் அந்த நபர் வராமலேயே எழுத்தில் விரட்டி விட முடியும் .

இந்த பாவையினை பயன்படுத்துவது எப்படி என்றால் ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்த வேண்டும் .ஆகவே குருவின் ஆலோசனைப்படி முறை அறிந்து இந்த சூட்சமங்களை தெரிந்து செய்தால் வெற்றி நிச்சயம் ஒரு சில பாவைக்குள் யந்திரங்கள் வைத்தும் பாவை செய்வார்கள் ஒரு சிலவற்றில் அதற்கான மூலிகை வேர்களை பாவையின் வயிறில் வைப்பார்கள் ஒரு சிலவற்றில் ஐங்கோல மை வைப்பார்கள் .ஒவ்வொரு கர்மங்களுக்கும் தனித்தனியான மந்திரங்கள் உண்டு .பொதுவான மந்திரங்கள் உபயோகிக்க கூடாது .

இந்த பாவை வைத்து செய்யப்படும் அஷ்ட கர்மங்கலளான .............

வசியம் 
மோகனம் 
தம்பனம் 
ஆகர்சனம் 
வித்வேஷனம் 
பேதனம் 
உச்சாடனம் 
மாரணம் 
இவைகளை மிகவும் சரியாக செய்து முடிக்க முடியும் ஆனால் இப்போது பலருக்கும் இவ்வகை முறை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இது அதர்வண வேத முறை என்றும் அகத்தியர் சுவடிகளிலும் இதைப்பற்றி எழுதியிருப்பதாக கூறுகிறார்கள் .


Comments